நடிகை ஜெனிலியா பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி தெலுங்கு ஹிந்தி என பல படங்களின் நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த உத்தம புத்திரனிலும் நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். குறும்புக்கார ரசிகர் ஒருவர், ஜெனிலியாவின் அங்கங்களை தொட்டுப் பார்த்திருக்கிறார். பொறுக்க முடியாத ஜெனிலியா அவனது கன்னத்தில் ஒரு முத்தம் மன்னிக்கவும் பளார் கொடுத்திருக்கிறார்.
எனினும் அடித்ததை மறுத்த ஜெனிலியா, ஒரு ரசிகர் தன்னுடன் சில்மிஷம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை தள்ளி விட்டதோடு சரி எனவும் கூறியிருக்கிறார்.
சரி, அதன் பின்னர் அந்த ரசிகன் என்ன செய்திருப்பான்? ஒரு கற்பனை... வந்தவன் போனவன் கண்டவன் காணாதவன் என எவன் ஆப்பிட்டாலும், ஜெனிலியாவிடம் அடிவாங்கியதை நாகூசாமல் சொல்லியிருப்பான்.
No comments:
Post a Comment