Tuesday, November 9, 2010

அஜித்தை சாப்பாட்டுக் கடை வைக்கும்படி சொல்கிறார் த்ரிஷா.

த்ரிஷா தற்போது அஜித்துடன் மங்காத்தாவிலும் கமலுடன் மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மங்காத்தா படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் புரியாணி சமைத்து பரிமாறியிருகிறார் நமது தல அஜித்.

புரியாணி நல்ல சுவையாக இருந்தது என எல்லோரும் பாராட்டியிருந்தனர். ஆனாலும் த்ரிஷ்வினால் புரியாணியை சுவைத்துப் பார்க்க முடியாமல் போய்விட்டது. மற்றவர்கள் சொல்லி  புரியாணியின் சுவையைப் பற்றி அறிந்திருக்கிறார் த்ரிஷா.

தன்னால் சுவைத்துப் பார்க்க முடியவில்லையே என கவலையில் இருந்த த்ரிஷாவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் பகிர்ந்து கொண்டவை :

அஜித் சமைத்து பரிமாறிய புரியாணியை சுவைத்துப் பார்க்க தவறிவிட்டேன். முதலாவது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் நான் சென்றுவிட்டேன். அதனால் எனக்கு கிடைக்கவில்லை. எனினும் அஜித்தின் புரியாணி நன்றாக இருந்ததாக மற்றவர்கள் கூறினார். அஜித் ஒரு ரேஸ்டோரெண்டை திறந்தால் நல்லாயிருக்கும்.

மேலும் கதைத்த த்ரிஷா, கமலுடன் நடிப்பது பெருமையான விடயமெனவும் கமலுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...