Sunday, November 7, 2010

நடிகை திவ்யாவிற்கு வந்த சோதனை.

நடிகை திவ்யாவிற்கு வந்த சோதனை என்ன தெரியுமா? திவ்ய தமிழ் படங்களில் நடிக்கக் கூடாதாம். ஆர்ப்பாட்டம் பண்ணி அறிக்கை விட்டவர் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் கண்ணன். சொன்ன காரணம், திவ்யா தமிழருக்கு எதிரானவராம்.

என்னதான் கண்ணன் மிரட்டினாலும், கெளதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு திவ்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதுபற்றி கண்ணன் சொன்னதாவது, திவ்யா வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய காலத்திலேயே நாம் எதிர்த்தோம். அப்போது தனது எதிர்கால படங்களில் திவ்யா நடிக்க மாட்டார் என கெளதம் மேனன் கூறியிருந்தார். எனவேதான் நாங்கள் மௌனமாக இருந்துவிட்டோம். ஆனால், கெளதம் மேனன் தனது வாக்கை மீறிவிட்டார். இது கண்டிக்கத்தக்கது. எங்களால் இதை ஏற்க முடியாது.

இதுபற்றி திவ்யா சொன்னதாவது, கெளதம் மேனனின் படங்களில் நான் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு இருக்கிறது. அவரின் படங்களில் நான் நடிப்பேனா இல்லையா என்பதை கெளதம் மேனனேதான் சொல்ல வேண்டும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...