Tuesday, November 16, 2010

ரம்லத் தனது மனைவி என்பதை மறுக்கும் பிரபு தேவா.

பிரபு தேவா குடும்பம்.
ரம்லத் தனது மனைவி இல்லை என பிரபு தேவா தெரிவித்திருக்கிறார். சட்டப்படி திருமணப் பதிவு மேற்கொள்ளப்படாததால் ரம்லத் தன்னுடைய மனைவி இல்லை என தெரிவிக்கும் பிரபு, அவருடன் குடும்பம் நடத்தி பிள்ளைகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவாவின் மனைவியின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்கம் சார்பாக பதியப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு பிரபு தேவா மற்றும் நயன்தாராவிற்கு நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பிரபு தேவா இவ்வாறு கூறியுள்ளார்.

பிரபு தேவாவின் இந்தக் கூற்றை போயேன நிரூபிப்பதற்காக, அவரது மனைவி, தேவையான எல்லா பத்திரங்களையும் சேகரித்து வைத்துள்ளார். ரேசன் கார்டு, பிள்ளைகளின் பிறப்பு உறுதிச் சான்றிதல்கள் என்பவற்றையும் எடுத்துவைத்துள்ளார்.

பிரபு தேவாவும் நயன்தாராவும் எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இது தொடர்பான செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க : Happy Reading

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...