இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல் எழுந்துள்ளது. மாதர் சங்கங்கள் மற்றும் மகளீர் அமைப்புகள் அந்தக் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. நாட்டில் முன்மாதிரியாக திகழ வேண்டியவரே இவ்வாறு மற்ற பெண்களை புகைப்பிடிக்க தூண்டக் கூடிய விதத்தில் நடிக்கலாமா என கேட்கின்றனர்.
தான் சாதாரணமாக புகைப் பிடிப்பதில்லை எனவும் அந்தக் காட்சியின் தேவை காரணமாகவே அவ்வாறு நடித்ததாகவும் கூறிய ஐஸ்வர்யா ராய், அந்தக் காட்சியில் நடித்த பின்னர் புகைபவர்களுக்கு அருகில் கூட செல்லக் கூடாது என தான் எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தன்னால் அந்தக் காட்சியை நீக்கச் சொல்ல முடியாதெனக் கூறிய ஐஸ்வர்யா ராய், படத்தின் இயக்குனரே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதே படத்தில் ஹ்ரிதிக் ரோஷனுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்ததாலும் சில காட்சிகளில் நெருக்கமாக நடித்ததாலும் ஐஸ்வர்யா ராய்க்கு குடும்பத்தில் பிரச்சனைகள் வந்ததாகவும் செய்தி வெளிவந்திருந்தது. அதனையும் ஐஸ்வர்யா ராய் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி : ஐஸ்வர்யா ராய்க்கு முத்தத்தால் வந்த வினை
No comments:
Post a Comment